கோவையில் உயர்ரக போதைப்பொருள் விற்பனை - கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது!

கோவை நவக்கரை அருகே உயர்ரக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 6 கிராம் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக - கேரளா எல்லையான வாளையாறு செல்லும் பாலக்காடு சாலை நவக்கரை அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து mathamphetamine என்ற உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தனிப்படை போலீசார் சாதாரண உடையில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர், உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் மேற்கொண்டனர்.

விசாரணையில், பிடிபட்ட மாணவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமத் பைசல் (வயது18), கோவை தனியார் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவர் மற்றும் அபினந்த் (வயது21) இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும், இருவரும் பெங்களூரில் இருந்து mathamphetamine என்ற உயர் ரக போதை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...