திருப்பூர் அருகே சித்திரகுப்தர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா - 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!

திருப்பூர் அருகே நடைபெற்ற சித்திரகுப்தர் கோவில் திருவிழா நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு நான்காயிரம் கிலோ அரிசியைக் கொண்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் சின்ணாண்டிபாளையம் பகுதியில் ஸ்ரீ சித்திரகுப்தர் திருக்கோயில் அமைந்துள்ளது. சித்திரகுப்தருக்கான தனிக்கோயில் தமிழகத்தில் 2 வது இடமாக இங்கு அமைந்துள்ளது.

கையில் எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் காட்சி தரும் சித்திரகுப்தர், மனிதர்களின் பாவக் கணக்கை எழுதி அவர்களின் கர்ம வினைக்கு தக்க பலன் அளிப்பார் என நம்பப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தர் பிறந்ததாக கருதப்படுவதால், அன்று அவருக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறுகிறது. இந்த தினத்தில் அவரை தரிசித்தால் மனிதர்களின் கர்மவினை பலன் நல்லவிதமாக மாறும் என நம்பப்படுகிறது.



அந்த வகையில், திருப்பூர் சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு யாகம் துவங்கப்பட்டு செய்து சித்திரகுப்தருக்கு தேன், நெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் இவற்றுடன் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டது.



இந்த விழாவைக் காண திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலில் திரண்டனர். இவர்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். சித்திரகுப்தரை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 4 ஆயிரம் கிலோ அரிசி கொண்டு உணவு தயார் செய்து பரிமாறப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...