திருப்பூர் அருகே நடைபெற்ற சித்திரகுப்தர் கோவில் திருவிழா நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு நான்காயிரம் கிலோ அரிசியைக் கொண்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் சின்ணாண்டிபாளையம் பகுதியில் ஸ்ரீ சித்திரகுப்தர் திருக்கோயில் அமைந்துள்ளது. சித்திரகுப்தருக்கான தனிக்கோயில் தமிழகத்தில் 2 வது இடமாக இங்கு அமைந்துள்ளது.
கையில் எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் காட்சி தரும் சித்திரகுப்தர், மனிதர்களின் பாவக் கணக்கை எழுதி அவர்களின் கர்ம வினைக்கு தக்க பலன் அளிப்பார் என நம்பப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தர் பிறந்ததாக கருதப்படுவதால், அன்று அவருக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறுகிறது. இந்த தினத்தில் அவரை தரிசித்தால் மனிதர்களின் கர்மவினை பலன் நல்லவிதமாக மாறும் என நம்பப்படுகிறது.

அந்த வகையில், திருப்பூர் சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு யாகம் துவங்கப்பட்டு செய்து சித்திரகுப்தருக்கு தேன், நெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் இவற்றுடன் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டது.

இந்த விழாவைக் காண திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலில் திரண்டனர். இவர்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். சித்திரகுப்தரை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 4 ஆயிரம் கிலோ அரிசி கொண்டு உணவு தயார் செய்து பரிமாறப்பட்டது.
கையில் எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் காட்சி தரும் சித்திரகுப்தர், மனிதர்களின் பாவக் கணக்கை எழுதி அவர்களின் கர்ம வினைக்கு தக்க பலன் அளிப்பார் என நம்பப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தர் பிறந்ததாக கருதப்படுவதால், அன்று அவருக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறுகிறது. இந்த தினத்தில் அவரை தரிசித்தால் மனிதர்களின் கர்மவினை பலன் நல்லவிதமாக மாறும் என நம்பப்படுகிறது.
அந்த வகையில், திருப்பூர் சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு யாகம் துவங்கப்பட்டு செய்து சித்திரகுப்தருக்கு தேன், நெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் இவற்றுடன் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் தீபாராதனை செய்யப்பட்டது.
இந்த விழாவைக் காண திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலில் திரண்டனர். இவர்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். சித்திரகுப்தரை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 4 ஆயிரம் கிலோ அரிசி கொண்டு உணவு தயார் செய்து பரிமாறப்பட்டது.