கோவை அருகே சந்தனமரம் வெட்டிக்கடத்தல் - 7 பேரை கைது செய்த வனத்துறை!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கூடலூர் பகுதியில் சந்தன மர திருட்டில் ஈடுபட்ட 7 பேரை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு வனத்துறை சார்பில் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகில் கூடலூர் கிராமத்தில் அரசு நிலத்தில், கட்டுமானம் ஏற்படுத்த, அங்கிருந்த பல மரங்களை வெட்டும்பொழுது,

அதில் இருந்த ஒரு சந்தன மரத்தையும் வெட்டி, அதன் அடித்துண்டை செதுக்கி, கடத்திச் சென்று விட்டதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மரங்களை வெட்டி கடத்திச் சென்ற 7 நபர்களை பிடித்து, கடத்திச் சென்ற 4 சந்தன மரத் துண்டுகளையும் கைப்பற்றினர்.

அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு வனத்துறையினர், கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முதல் இரு எதிரிகளுக்கு தலா ரூ.25,000/- வீதமும், வெட்டிக் கடத்தும் பணிக்கு உறுதுணையாக இருந்த மற்ற ஐந்து எதிரிகளுக்கு தலா ரூ.10,000/- வீதமும், ஆக மொத்தம் ரூ.1,00,000/- அபராதம் விதித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...