முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து கோவையில் ஆட்சியர் தலைமையில் நிலைக்குழு கூட்டம்!

முதலமைச்சர் காலை உணவு திட்டமானது வரும் கல்வியாண்டு முதல் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது தொடர்பாக கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இரண்டாம் கட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மாவட்ட அளவிலான நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எதிர்வரும் கல்வி ஆண்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மாவட்ட அளவிலான நிலைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மகளிர் திட்ட இயக்குனர் செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் சத்துணவு திட்ட நேர்முக உதவியாளர் மகேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கோவை மாவட்டத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டில் இந்த காலை உணவு திட்டத்தை 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி குழந்தைகளுக்கு எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...