கோவையில் மதநல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்!

மத நல்லிணக்கம் குறித்து கோவை மாநகரில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளி வாசல்களுக்கு ஊர்வலமாக சென்று பதாகைகள் ஏந்திபடி மாநகராட்சி அரசு பள்ளியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: கோவையில் மத நல்லிணக்கம் குறித்து பொது மக்களிடையே அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவையில் உள்ள சாந்தி ஆசிரமம், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, ஜமா அத் இஸ்லாமி ஹிந்த், உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பள்ளி மாணவர்களை கொண்டு மதநல்லிக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்த நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கோவை கோணியம்மன் கோவில், அதன் அருகில் உள்ள மைக்கேல் தேவாலயம், டவுன்ஹால் பகுதியில் உள்ள பள்ளிவாசல், ஜெயின் கோவில், உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஒவ்வொரு மதமும் மத நல்லிணக்கம் குறித்து என்ன கூறுகிறது என்பது குறித்தான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...