தமிழகத்தில் தொடர்மழை எதிரொலி - கோவையில் மல்லிகைப்பூ விலை உயர்வு

தமிழகத்தில் பெய்துவரும் தொடர்மழையால், கோவை பூமார்கெட்டில் மல்லிகைப் பூ இன்று அதிரடியாக உயர்ந்து கிலோ ரூ. 600க்கு விற்பனையாகிறது. இதேபோல், முல்லை கிலோ ரூ.240க்கும், சாமந்தி கிலோ ரூ.380க்கும் விற்கப்பட்டது.


கோவை: வடகோவை பகுதியில் உள்ள பூமார்க்கெட் டுக்கு நீலகிரி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நாள்தோறும் உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கோடை காலம் தொடங்கியது முதல் பூக்கள் உற்பத்தி அதிகரித்ததால், உதிரிப்பூக்களின் விலை வீழ்ச்சியடைந்து இருந்தது. அதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக, மல்லிகை விலை கிலோ 300 ரூபாய்க்கு மேல் உயரவில்லை. இதேபோல், மற்ற உதிரிப்பூக்களும் குறைந்த விலைக்கே விற்பனையானது.

இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பூக்கள் உதிர்ந்து உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், கோவை பூ மார்க்கெட்டுக்கு வரும் மல்லிகைப்பூ வரத்து குறைந்ததால், அதன் விலை அதிகரித்துள்ளது.

2 மாதங்களாக ரூ.300 ஆக இருந்த ஒரு கிலோ மல்லிகைப் பூ நேற்று ரூ. 600க்கு விற்பனையானது.

இதேபோல், சாமந்தி கிலோ, 380 ரூபாய்க்கும், முல்லை கிலோ, 240 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா கிலோ, 320 ரூபாய்க்கும், சம்பங்கி 80 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...