இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்காக ஓடி வந்து உதவிய கோவை போலீசார்!

உதகையைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு உயர் சிகிச்சை அளிக்க பாண்டிச்சேரிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். மருத்துவமனை முதல் விமான நிலையம் வரையில் வேகமாக செல்வதற்காக கோவை மாவட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி உதவி செய்தனர்.


கோவை: உதகையைச் சேர்ந்த பெண்ணை விமான நிலையம் மூலம் பாண்டிச்சேரிக்கு கொண்டு செல்ல மாவட்ட போக்குவரத்து சார்பில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வழிவகை செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் வசிக்கும் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவின் காரணமாக உயர் சிகிச்சை அளிக்க உடனடியாக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் அழைத்துச் செல்ல வேண்டி இருந்ததால் அப்பெண்ணின் குடும்பத்தார் கோவை மாவட்ட காவல் துறையினரை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் பாண்டிச்சேரிக்கு எந்தவித போக்குவரத்து இடையூறும் இன்றி விரைவாக செல்ல உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், அன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர், காவலர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் துறையினர் ஆகியோர் இணைந்து மேற்படி பாதிக்கப்பட்ட பெண் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு சாலையில் எந்தவித இடையூறும் இன்றி செல்ல வழிவகை ஏற்படுத்தி கொடுத்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினரை மனதார பாராட்டினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...