கோவையில் கடையை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளை!

கோவை சாய்பாபா காலனி அருகே கே.கே புதூரை சேர்ந்த அருண்குமார்(45) என்பவர் டிரேடர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையை உடைத்து மர்மநபர்கள் ரூ. 4 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.


கோவை: சாய்பாபா காலனி அருகே கடையை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே. புதூர் பெரிய சுப்பன வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(45).

இவர் காட்டூர் வெங்கடசாமி வீதியில் டிரேடர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அருண்குமார் தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

நள்ளிரவு இவர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அது திசை திரும்பி இருந்தது.

இது அருண்குமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் கடைக்கு விரைந்து சென்று கடையை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கல்லாவில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து அருண்குமார் காட்டூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...