கோவை சாய்பாபா காலனி அருகே கே.கே புதூரை சேர்ந்த அருண்குமார்(45) என்பவர் டிரேடர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையை உடைத்து மர்மநபர்கள் ரூ. 4 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கோவை: சாய்பாபா காலனி அருகே கடையை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே. புதூர் பெரிய சுப்பன வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(45).
இவர் காட்டூர் வெங்கடசாமி வீதியில் டிரேடர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அருண்குமார் தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
நள்ளிரவு இவர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அது திசை திரும்பி இருந்தது.
இது அருண்குமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் கடைக்கு விரைந்து சென்று கடையை திறந்து உள்ளே சென்றார்.
அப்போது கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கல்லாவில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அருண்குமார் காட்டூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கே.கே. புதூர் பெரிய சுப்பன வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார்(45).
இவர் காட்டூர் வெங்கடசாமி வீதியில் டிரேடர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அருண்குமார் தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
நள்ளிரவு இவர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அது திசை திரும்பி இருந்தது.
இது அருண்குமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் கடைக்கு விரைந்து சென்று கடையை திறந்து உள்ளே சென்றார்.
அப்போது கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கல்லாவில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அருண்குமார் காட்டூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.