ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழை- வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

ஊட்டியில் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழை காரணமாக தாழ்வாக உள்ள கல்லட்டி பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் விடிய, விடிய தூங்க முடியாமல் தவித்தனர்.


நீலகிரி: ஊட்டியில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று காலை முதல் மந்தமான காலநிலை காணப்பட்டது. பின்னா் மதியம் கனமழை பெய்தது. இதன் காரணமாக ரயில் நிலையம், படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா்.

சேரிங்கிராஸ், பஸ் நிலையம், மாா்க்கெட், தலைகுந்தா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. மழை காரணமாக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலும், சுற்றுலா வாகனங்களிலும் முடங்கினா்.

தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழை காரணமாக தாழ்வாக உள்ள கல்லட்டி பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் விடிய, விடிய தூங்க முடியாமல் தவித்தனர். வீடுகளுக்குள் இருந்த புகுந்த மழைநீரை குடியிருப்புவாசிகள் இன்று காலை வரை வெளியேற்றினா்.

தொடர் மழை இருக்கும் பட்சத்தில் இப்பகுதி மக்கள் அனைவரும் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என வருவாய்த்துறையினா் தெரிவித்தனா். இதற்கிடையே ஊட்டியிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் சாலையில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...