ஊட்டியில் தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழை காரணமாக தாழ்வாக உள்ள கல்லட்டி பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் விடிய, விடிய தூங்க முடியாமல் தவித்தனர்.
நீலகிரி: ஊட்டியில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று காலை முதல் மந்தமான காலநிலை காணப்பட்டது. பின்னா் மதியம் கனமழை பெய்தது. இதன் காரணமாக ரயில் நிலையம், படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா்.
சேரிங்கிராஸ், பஸ் நிலையம், மாா்க்கெட், தலைகுந்தா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. மழை காரணமாக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலும், சுற்றுலா வாகனங்களிலும் முடங்கினா்.
தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழை காரணமாக தாழ்வாக உள்ள கல்லட்டி பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் விடிய, விடிய தூங்க முடியாமல் தவித்தனர். வீடுகளுக்குள் இருந்த புகுந்த மழைநீரை குடியிருப்புவாசிகள் இன்று காலை வரை வெளியேற்றினா்.
தொடர் மழை இருக்கும் பட்சத்தில் இப்பகுதி மக்கள் அனைவரும் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என வருவாய்த்துறையினா் தெரிவித்தனா். இதற்கிடையே ஊட்டியிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் சாலையில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று காலை முதல் மந்தமான காலநிலை காணப்பட்டது. பின்னா் மதியம் கனமழை பெய்தது. இதன் காரணமாக ரயில் நிலையம், படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா்.
சேரிங்கிராஸ், பஸ் நிலையம், மாா்க்கெட், தலைகுந்தா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. மழை காரணமாக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலும், சுற்றுலா வாகனங்களிலும் முடங்கினா்.
தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழை காரணமாக தாழ்வாக உள்ள கல்லட்டி பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் விடிய, விடிய தூங்க முடியாமல் தவித்தனர். வீடுகளுக்குள் இருந்த புகுந்த மழைநீரை குடியிருப்புவாசிகள் இன்று காலை வரை வெளியேற்றினா்.
தொடர் மழை இருக்கும் பட்சத்தில் இப்பகுதி மக்கள் அனைவரும் அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என வருவாய்த்துறையினா் தெரிவித்தனா். இதற்கிடையே ஊட்டியிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் சாலையில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.