பொள்ளாச்சியில் மக்னா யானையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சியில் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானையை விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து சேதமாக்கி வருவதால், உயிர்சேதம் ஏற்படுவதற்குள் யானையை பிடிக்க வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: மக்னா யானையை பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் மயக்கூசி செலுத்தி பிடிபட்ட மக்னா யானையை பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியான டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது.

இந்த யானை கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து கோவையை நோக்கிச் சென்றது மீண்டும் மயக்கூசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலையில் யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை அடுத்துள்ள மந்திரி மட்டம் பகுதியில் விடப்பட்டு கண்காணித்து வந்தனர்..

ஆனால் தற்போது ரேடியோ காலர் கருவி பழுதாகி செயலிழந்து உள்ளதால் யானை நகர்ந்து செல்லும் இடத்தை கண்காணிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர்.



இந்நிலையில் மக்னாயானை மீண்டும் இரண்டாவது முறையாக வனப்பகுதியை விட்டு வெளியேறி பொள்ளாச்சி சரளப்பதி பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து சுற்றித் திரிகிறது.



விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை குடியிருப்புக்குள் வராமல் இருக்க டாப்சிலிப் பகுதியிலிருந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.



ஆனால் இந்த யானை வனப்பதிக்குள் செல்லாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்திற்குள் புகுந்து 57 மா மரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளது மேலும் அப்பகுதியில் பல தென்னை மரங்களையும் சாய்த்து யானை சேதப்படுத்தியுள்ளது.



அதேபோல் அப்பகுதியில் மக்கள் நடமாடுவதற்கு மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள் இந்த மக்னா யானை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் மனிதர்களை தாக்கி விடுமோ என்ற அச்சத்திலும் மீண்டும் விவசாய நிலத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகளும் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த யானையால் வீடுகளில் இரவு முழுதும் குழந்தைகளை வைத்து பாதுகாப்பின்றி உறங்குவதாகவும் இந்த மக்னா யானையால் உயிர் சேதம் ஏற்படுவதற்குள் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த யானையை விரைவில் பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும். இல்லை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...