கோவையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு - விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு!

கோவை‌ மாநகராட்சி கோணவாய்க்கால்பாளையம்‌ மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்த மேயர் கல்பனா, பணிகளை 15 நாட்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.99 மற்றும்‌ 85க்கு உட்பட்ட கோணவாய்க்கால்பாளையம்‌ பகுதியில்‌ நெடுஞ்சாலைத்துறை மூலம்‌ நடைபெற்று வரும்‌ மழைநீர் வடிகால்‌ மற்றும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



பின்னர் மழைநீர்‌ வடிகால்‌ மற்றும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகளை 15 தினங்களுக்குள்‌ முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வரவும்,‌ சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும்‌ பொறியாளர்களுக்கு உத்தரவிட்டனர்‌.



அதனைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.79க்கு உட்பட்ட செல்வபுரம்‌ பகுதியில்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர்‌ கல்பனா‌, அப்பகுதியிலுள்ள மழைநீர்‌ வடிகாலை தூர்வாரவும்‌, புதிதாக மழைநீர்‌ வடிகால்‌ கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...