தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பது எப்படி..? - கோவையில் போலீசாருக்கு பயிற்சி

கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் சார்பில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உளவு பிரிவு போலீசாருக்கான பயிற்சி முகாம், கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிப்பது, தடுப்பது மற்றும் வழக்குகளை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் சார்பில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.



மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மாநகர காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், உளவு பிரிவு போலீசார் கலந்து கொண்டனர்.

இதில் தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிப்பது, தடுப்பது மற்றும் வழக்குகளை கையாள்வது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.



பயிற்சி முகாமில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தீவிரவாதம் என்பது ஒரு மக்களுக்கு எதிராவும், அரசுக்கு எதிராகவும் வரும், ஒரு சில வேண்டுமென்றே தீவிரவாதத்தை உருவாக்குகின்றனர். இதனை முறையாக நாம் கையாள வேண்டும்.

பொதுமக்கள் கொடுக்கும், புகார் மனுக்களில் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது. நியாயமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். காவலர் சிலர் தவறான முறையில் வார்த்தை விடுகின்றனர், அவற்றை சரிசெய்து கொள்ள வேண்டும்.

வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்கள், சோதனைக்கு பின் மக்களிடம் ஒத்துழைப்புக்கு நன்றி செல்ல வேண்டும் இது மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும். இதனை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் இதனை முழுமையாக கடை பிடிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...