கோவை இதயங்கள் அறக்கட்டளை ஆண்டு விழா - நன்கொடையாளர்கள் கவுரவிப்பு!

கோவையில் இதயங்கள் அறக்கட்டளையின் 6வது ஆண்டு விழாவில் சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளுக்கு உதவி வரும் இதயம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.


கோவை: கோவையை மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் உபகரணங்களை இலவசமாக வழங்கி வரும் ‘இதயங்கள் அறக்கட்டளை’-யின் 6ம் ஆண்டு விழா கோவை சிட்ரா அரங்கத்தில் நடைபெற்றது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.



விழாவில் பேசிய அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன், ‘‘கடந்த, 2017ல், 10 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட‘இதயங்கள் அறக்கட்டளை’ இன்று, 1,100 குழந்தைகளுக்கு உதவி வருகிறது. தமிழகத்தில் மட்டும், 20 ஆயிரம் குழந்தைகள் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து செய்து தரப்படும், என்றார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி, முதல் வகை சர்க்கரை நோய் உள்ள இந்த குழந்தைகளையும், அவர்களை பெற்றவர்களையும் காக்கும் கடமையை கொண்ட அரசும், இந்த சமுதாயமும்கூட இதயங்கள் அறக்கட்டளைக்கு கடன்பட்டிருக்கிறது.

மருத்துவர்களிடம் இந்த சமுதாயத்துக்கு நல்லது செய்யும் எண்ணம் இருக்கிறது. இருப்பினும் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகள் காரணமாக, பலரால் இதுபோன்ற உதவியை செய்ய முடிவதில்லை. ‘இதயங்கள் அறக்கட்டளையினர் துன்பம் என்று வந்தவர்களை அன்புடன் அரவணைத்து, உதவி செய்து அவர்கள் துன்பத்தை போக்குகின்றனர். அவர்கள் பணி உன்னதமானது, என்றார்.



இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளும், பெற்றோரும் தங்களுக்கு நிழலாக இருந்து உதவிக்கரம் நீட்டும் நன்கொடையாளர்களின் கால்களை தொட்டு வணங்கி, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது காண்போரை நெகிழ வைத்தது.

இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ‘ராசி சீட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், புரொப்பெல் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வித்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...