மே தினம் - உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் கிராம சபை கூட்டம்

மே தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சின்ன வீரன் பட்டி, ஆண்டிய கவுண்டனூர் , கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், பெரியகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்.


திருப்பூர்: மே தினத்தை ஒட்டி உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மே தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி, சின்ன வீரன் பட்டி, ஆண்டிய கவுண்டனூர், கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், பெரியகோட்டை ஊராட்சி உட்பட பல்வேறு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இக்கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் அனைவருக்கும் வீடு கணக்கெடுக்கும் பணி உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.



குறிப்பாக ஜல் ஜீவன் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு கிராம சபை கூட்டங்களில் நடைபெற்றது. இதில், சின்ன வீரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி அய்யாவு, பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் கருப்ம்மாள், ஆண்டிய கவுண்டனூரா ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...