வால்பாறையில் மே தின பொதுக்கூட்டம் - அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்பு!

வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிற்சங்கம் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் அனைத்து தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 450 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


கோவை: வால்பாறையில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிற்சங்கம் சார்பாக வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகில் மே தின பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த பொதுக்கூட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிறுவனங்கள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புகளில் நடைபாதை, கழிப்பிட வசதி, குடிநீர், குடியிருப்பு ரிப்பேர், மற்றும் நவீன மருத்துவ வசதி உடைய மருத்துவமனை அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



வால்பாறையில் உள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய இந்த மே தின பொதுக்கூட்டத்தில், பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் கையில் கொடியேந்தி பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து வரை சென்று மீண்டும் அஞ்சலகம் வரை சென்று வந்தனர்.



இந்த பேரணியில் CITU பொது செயலாளர் பரமசிவம், கண்ணில் கருப்பு துணி அணிந்து கலந்து கொண்டார். இதில் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 450 ரூபாய் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இக்கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி மோகன், ஏ.என்.டி.யு.சி. கருப்பையா, சி.ஐ.டி.யு பரமசிவம், ஹச்.எம்.எஸ் மாணிக்கம், வி.டி.டி.எஸ் தர்மராஜ், ஐ.என்.பி.சி.டபிள்யூ அருணகிரி பாண்டி, ஏ.ஐ.டி.டி.யு எட்வர்ட், பி.டி.எம் செந்தில் முருகன், தே.ஆ.தோ சங்கம் ராஜேந்திரன், ஆகிய தொழிற்சங்க பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...