திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள், லாரி ஓட்டுநர்களுக்கு தர்பூசணி பழம், குடிநீர், மோர் வழங்கப்பட்டன.
திருப்பூர்: பல்லடம் அருகே லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இன்று மே தினத்தை ஒட்டி கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, பல்லடம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

பொதுமக்களுக்கு வெயில் காலம் முடியும் வரை தர்பூசணி பழம், குளிர்ச்சியான மோர் மற்றும் குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இன்று மே தினத்தை ஒட்டி கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி, பல்லடம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.
பொதுமக்களுக்கு வெயில் காலம் முடியும் வரை தர்பூசணி பழம், குளிர்ச்சியான மோர் மற்றும் குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினர்.