கோவை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.7.50 லட்சம் கொள்ளை - போலீசார் விசாரணை!

கோவை ஆலாந்துறையை சேர்ந்த சண்முகசுந்தரம், பூளுவம்பட்டி டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார். பணியை முடித்து விட்டு வந்த போது, கத்தியை காட்டி ரூ.7.50 லட்சம் பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: பூளுவம்பட்டி டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் பூளுவம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகிறார். இன்று விடுமுறை என்பதால் நேற்று டாஸ்மாக் கடையில் வசூலான பணம் ரூ.7.38 லட்சம் மற்றும் பதிவேட்டை எடுத்துக் கொண்டு, தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது ஆலாந்துறை அருகே வந்தபோது, அவரை வழி மறித்த 3 இளைஞர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7.38 லட்சம் பணம், செல்போனை கொள்ளைடித்து சென்றனர். இதையடுத்து அவர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர். மேலும் ஊழியருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர் இருக்குமோ? என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...