மே தினத்தையொட்டி கோவையில் கிராம சபை கூட்டம் - ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பங்கேற்பு!

மே மாதம் 1ஆம் தேதியான இன்று தொழிலாளர் தினத்தையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


கோவை: மே தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.



மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த இடிகரை போளுவாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சியின் தலைவர் அம்பி என்கிற சதானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம வளர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் நடைபெற்று முடிந்த பணிகள், செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தை திருமணம், திறந்தவெளி கழிப்பிடம் கூடாது என மாவட்ட ஆட்சியர் வாசிக்க பொதுமக்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.



இதனையடுத்து கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கிராம சபை கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் அலமேலு மங்கை, ஊராட்சி செயலர் நாகராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...