பொள்ளாச்சியில் தூய்மைப்பணியாளர்கள் வாழ்வுரிமை பேரணி - 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி அனைத்து வகையான தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் தமிழகத்தில் கலைஞர் அறிவித்த 6 மணி நேர வேலைத் திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.



பொள்ளாச்சி: உழைப்பாளர் தினத்தையொட்டி, பொள்ளாச்சியில் தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார தூய்மை மற்றும் பொது பணியாளர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களின் வாழ்வுரிமை பேரணி நடைபெற்றது.

மாவட்ட தலைவர் முருகானந்தம் மாவட்டச் செயலாளர் வேல்முருகன் தலைமையில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கி பேரணி, மத்திய பேருந்து நிலையம், வெங்கட்ராமன் வீதி வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் 200.க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்தப் பேரணியின்போது, திமுக அரசு கடந்த தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து வகையான தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளாட்சி துறையில் உள்ள ஒரு லட்சம் பணியாளர்கள் வேலை இழக்கும் வகையில் 152, 139,111 அரசாணை வெளியிடப்பட்டது.



உடனடியாக தமிழக அரசு அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை திட்டத்தை முன்மொழிந்துள்ளனர். உடனடியாக அந்தத் திட்டத்தை வாபஸ் பெற்று கலைஞர் அறிவித்த 6 மணிநேர வேலை திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...