மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் - தாராபுரத்தில் ரேக்ளா மாட்டு வண்டிப் பந்தயம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய திமுக மற்றும் சின்னமலை குரூப்ஸ் இணைந்து ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தை நடத்தியது. இதனை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சோமனூரில் இருந்து மண்டலபுதூர் செல்லும் சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாராபுரம் ஒன்றிய திமுக சின்னக்கம்பாளையம் பேரூர் கழக திமுக மற்றும் சலாம் பாளையம் சின்னமலை குரூப்ஸ் இணைந்து நடத்திய 14 ஆம் ஆண்டு ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், போட்டியை கொடியசைத்து தொடங்கி துவக்கி வைத்தார். தாராபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் ஊராட்சி ஒன்றிய தலைவருமான எஸ் வி செந்தில் குமார், கோவை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும், ரேக்ளா சங்கத்தின் தலைவருமான பிரகாஷ் சின்னக்கம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.



200 மீட்டர் 300 மீட்டர் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தில், பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை பழனி தாராபுரம் குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.



நிர்ணயிக்கப்பட்ட தூரங்களை குறிப்பிட்ட குறைவான மணித்துளிகளில் சென்றடையும் முதல் மூன்று காளை மாடுகளுக்கு தங்க காசுகள் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்று சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, சாலையில் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளுக்கு பின்னால் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி கண்டு ரசித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...