தாராபுரம் அருகே கோயிலில் தேனீக்கள் தாக்குதல் - 4 வயது சிறுமி உட்பட 15 பேர் பாதிப்பு!

தாராபுரம் அருகே கோவிலுக்கு சென்ற பொதுமக்களை தேனீக்கள் கொட்டியதில் 4 வயது சிறுமி உட்பட 15 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த காட்டம்மன் திருக்கோவில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி கும்பிடச்செல்வது வழக்கம். அந்தவகையில், தேர் பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காட்டம்மன் கோவிலுக்கு நேற்றுச் சென்றனர்.



பக்தர்கள் பொங்கல் வைத்து கொண்டிருக்கும்போது, எழுந்த புகை காரணமாக அங்கிருந்த தேனீக்கள் பக்தர்களை கொட்டத் தொடங்கியது. இதில் தேர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மகா (4),சுந்தரபாண்டி (11), பிரியங்கா (21), சுகன்யா (28), பிரியா (32), கவிதா (33), சக்திவேல் (40), கன்னியாத்தாள் (58),வள்ளியம்மாள் (75) உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். இரண்டு பேர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...