பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்

பல்லடம் அருகே சின்னிய கவுண்டம்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையால் விவசாய நிலம் பாதிப்படைவதாகவும் பொது மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளதால் அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு இயங்கி வரும் மதுபான கடையால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் குடிமகன்கள் மது பாட்டில்களை விவசாய நிலத்திலும் சாலைகளிலும் வீசி செல்வதால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும்,



மதுபான கடைக்கு அருகிலேயே அங்கன்வாடி மையம்,பள்ளிக்கூடங்கள், கோவில்கள் அமைந்துள்ளதாகவும் பள்ளி குழந்தைகள் அவ்வழியாகச் செல்வதற்கு கூட அச்சமடைவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் 24, மணி நேரமும் சட்டவிரோதமாகவும் மது விற்பனை நடைபெறுவதால் மிகுந்த பாதிப்பு ஏற்படுவதால் இந்த மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடமும்,



முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று அப்பகுதி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பெண்கள் கோஷமட்டபடி ஒருபுறம் போராட்டம் நடத்திய நிலையில் 50க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...