திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான மல்டி லெவல் பார்க்கிங் உள்ளது. இங்கு நிறுத்திய வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை மர்மநபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருப்பூர்: திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் அதிக விலை மதிப்பிக்க ஹெல்மெட் திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான மல்டி லெவல் பார்க்கிங் உள்ளது.
இங்கு கடந்த 25ஆம் தேதி கமலேசன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற நிலையில் மறுநாள் தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட் மாற்றப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இது குறித்து பார்க்கிங்கில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் விலை மதிப்பான ஹெல்மெட்டை திருடிவிட்டு மாற்று ஹெல்மெட்டை வைத்துச் சென்றது தெரியவந்தது.
தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான மல்டி லெவல் பார்க்கிங் உள்ளது.
இங்கு கடந்த 25ஆம் தேதி கமலேசன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற நிலையில் மறுநாள் தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட் மாற்றப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து பார்க்கிங்கில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் விலை மதிப்பான ஹெல்மெட்டை திருடிவிட்டு மாற்று ஹெல்மெட்டை வைத்துச் சென்றது தெரியவந்தது.
தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.