தாராபுரம் அருகே தாயம்பாளையம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்தினை முறையாக இயக்குவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம், சூரியநல்லூர், ராசிபாளையம், தம்புரெட்டிபாளையம், தாயம்பாளையம் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் தினமும் செல்லக்கூடிய 7-ம் நம்பர் அரசு பஸ் சரிவர வராததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் 100 நாள் பணியாளர்கள் ராசிபாளையம் பகுதியில் பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த பேருந்து மூலமாக தாயம்பாளையம் அரசு பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லக்கூடிய நோயாளிகளும் மற்றும் இந்த கிராம பகுதிகளில் இருந்து நகரத்திற்கு செல்ல கூடியவர்களும் நாள்தோறும் பயணிக்கின்றனர்.
ஆனால், இந்த பேருந்து சரிவர வராததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி, அந்த வழியாக வந்த அரசு பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர். தகவல் அறிந்த ஊதியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜன், தாராபுரம் அரசு பேருந்து கிளை மேலாளர் ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தினமும் உரிய முறையில் பேருந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்த பேருந்து மூலமாக தாயம்பாளையம் அரசு பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லக்கூடிய நோயாளிகளும் மற்றும் இந்த கிராம பகுதிகளில் இருந்து நகரத்திற்கு செல்ல கூடியவர்களும் நாள்தோறும் பயணிக்கின்றனர்.
ஆனால், இந்த பேருந்து சரிவர வராததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
அதன்படி, அந்த வழியாக வந்த அரசு பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர். தகவல் அறிந்த ஊதியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜன், தாராபுரம் அரசு பேருந்து கிளை மேலாளர் ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தினமும் உரிய முறையில் பேருந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.