கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.5,000க்கு விற்பனை - விலை குறைந்ததால் விற்பனை மந்தம்!

கடும் வெப்பம் காரணமாக கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் கடந்த 2 வாரங்களாக ஆடுகள் விற்பனை குறைவாக இருந்து வந்த நிலையில், இன்றைய தினம் 10 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.5,000க்கு விலை போனதால், விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்யாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் ஆடுகளின் விலை குறைந்ததால், விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்யாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்று கன்னிவாடி சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கன்னிவாடி, மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.



அவற்றை வாங்குவதற்கு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, உடுமலை போன்ற நகரங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகிறார்கள். இதனிடையே கடந்த 2 வாரங்களாகவே கடும் வெப்பம் காரணமாக வியாபாரம் குறைந்து காணப்பட்டது.

அதன்படி நடந்த சந்தையில் 3,000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளுக்கு விலை குறைந்து இருந்ததால் ஆடுகளை விவசாயிகள் விற்பனை செய்யாமல் திருப்பி கொண்டு சென்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...