பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துக..! - கோவை சூலூரில் போக்குவரத்து சங்க ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்!

ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சூலூர் அருகே நீலாம்பூர் எல் அண்ட் டி புறவழிச்சாலையில் வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூரில் ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூலூர் அருகே நீலாம்பூரில் எல் அண்ட் டி புறவழிச்சாலையில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்க பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் சமூக நீதி வாகன ஓட்டுநர் தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு சுங்கச்சாவடியை கடக்கும் பொழுதும் அங்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒரு வாகனத்திற்கு இவ்வளவு என நிர்ணயித்து லஞ்சத் தொகை கேட்கின்றனர்.

இந்த லஞ்ச நடவடிக்கையை ஒழிக்க வேண்டும். நீலம்பூர் எல்என்டி புறவழி சாலையை உடனடியாக விரிவாக்கம் செய்திட வேண்டும் என்பன உள்பட 25-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், சமூக நீதி தொழிலாளர் தொழிற்சங்கத்தை சேர்ந்த நந்தகுமார், ஓட்டுநர் உரிமைக்குரல் நுகர்வோர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சரவணன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...