ஆருத்ரா விவகாரத்தில் அவதூறு - 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு வழங்ககோரி ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!

ஆருத்ரா விவகாரத்தில் ரூ.84 கோடி பணம் பெற்றதாக தன்னை பற்றி அவதூறு பரப்பிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் ஆர்.எஸ்.பாரதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


சென்னை: ஆருத்ரா விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால், 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு வழங்ககோரி பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திமுகவினரின் சொத்துப்பட்டியல் என சில விவரங்களை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட முக்கிய அமைச்சர்களின் பெயர்களில் பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், இது திமுகவினரின் முதல் கட்ட சொத்து பட்டியல் எனக் கூறிய அண்ணாமலை, இதுகுறித்து, சிபிஐ-யிடம் புகார் அளிக்கப்போவதாகவும், கூறியிருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை எந்தவித ஆதாரமும் இன்றி அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டினார். மேலும், அண்ணாமலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து அண்ணாமலை தனது கருத்துக்கு மன்னிப்பு கோரவில்லை என்றால் 500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி என திமுகவினர் பலரும் அடுத்தடுத்து தங்களை பற்றி அண்ணாமலை அவதூறு பரப்பியதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.

இதனிடையே ஆருத்ரா விவகாரத்தில் அண்ணாமலை ரூ.84 கோடி பெற்றதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியிருந்தார். ஆருத்ரா விவகாரத்தில் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை, என் மீது அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் 500 கோடியே 1 ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தனது வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் மூலமாக பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...