13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - உடுமலை இளைஞருக்கு 20 ஆண்டு சிறை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உடுமலையை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவருக்கு 20 ஆண்டு சிறைதண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது21). கடந்த 2022ம் ஆண்டு இவர், 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதுகுறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், உடுமலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கோகுலகிருஷ்ணனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், கோகுலகிருஷ்ணனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பாலு உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. தீர்ப்புக்கு பின், கோகுலகிருஷ்ணன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...