வால்பாறையில் வழித்தடத்தை மறைத்து நின்ற சுற்றுலா வாகனங்கள் - சாலையை கடக்க முடியாமல் திணறிய யானைகள்!

வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் குடிப்பதற்காக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வருகின்றன. வாகனங்களை வனச்சாலையில் நிறுத்த வேண்டாம் என்று வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் அதைக் கண்டு கொள்ளாமலும் வனவிலங்குகளால் வரும் ஆபத்தை உணராமலும் வனச்சாலையில் வழிநெடுக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.



கோவை: தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்துவருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தமிழக கேரள எல்லை பகுதியான சாலக்குடி செல்லும் வழித்தடத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை காண ஆர்வத்துடன் செல்கின்றனர்.

இந்த நிலையில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்பவர்கள் மலுக்குபாறை சாலக்குடி சாலையில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றனர்.



அப்போது வனப்பகுதியை விட்டு தனது குட்டிகளுடன் வெளியேறிய யானைகள், சாலையை கடக்க முற்பட்டபோது அப்பகுதில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களால் சாலையை கடக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாயின.



நாள்தோறும் யானைகள் வழித்தடத்தில் வாகனங்கள் மறித்து நிறுத்தி வைக்கப்படுவதால், யானைகள் அப்பகுதியைக் கடக்க முடியாமல் அவதிக்குள்ளாவது தொடர்ந்து வருகிறது. சிறிது நேரம் கழித்து வாகன ஓட்டிகள் வாகனத்தை எடுத்து சென்றதால் யானைகள் சாலையை கடந்து சென்றன.

கோடைகாலம் என்பதால் தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் குடிப்பதற்காக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் செல்கின்றன. எனவே, வாகனங்களை வனச்சாலையில் நிறுத்த வேண்டாம் என்று சுற்றுலா பயணிகளிடம் வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் அதைக் கண்டு கொள்ளாமலும் வனவிலங்குகளால் வரும் ஆபத்தை உணராமலும் வனச்சாலையில் வழிநெடுக்க வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.

எனவே, வனச்சாலைகளில் வாகனங்களை சுற்றுலா பயணிகள் நிறுத்தினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...