நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியா? - கமலஹாசன் பதில் என்ன?

கோவை - அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோவை, சேலம் மண்டல பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக கூட்டத்திற்கு பின் பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.


கோவை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை - அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் கோவை மற்றும் சேலம் மண்டல பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன் பேசியதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு இது குறித்து முடிவெடுக்க இங்கு கூட்டம் கூடி இருக்கின்றோம், இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும்.

பெங்களூருவுக்கு பிரச்சாரத்திற்கு செல்வது குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும். இது நாங்கள் பேசுவதற்கான கூட்டம், என்ன பேசி இருக்கிறோம் என்பது ரகசியம்.

சட்டமன்றத்தில் தவறவிட்டதை நாடாளுமன்றத்தில் பெற திட்டமா என கேள்வி எழுப்பியதற்கு, இருக்கலாம் அது நல்ல எண்ணம் தானே என பதிலளித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...