திருப்பூர் குமரன் சாலையில் பைக்குகள் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் பலி, மூவர் காயம்!

திருப்பூர் குமரன் சாலையில் மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

திருப்பூரில் பிரதான சாலையில் ஒன்றான குமரன் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும். இதையடுத்து போக்குவரத்து போலீசார் சார்பில் கனரக வாகனங்கள் மாநகர எல்லைக்குள் வருவதற்கு நேர கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டது.



இதனிடையே குமரன் சாலையில் மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து அப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு கார்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.



இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.



இதை அடுத்து படுகாயம் அடைந்த மூன்று பேரும் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் லாரியில் அதிக எடை ஏற்றி வந்ததால் லாரியின் பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...