கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக ரவுண்டானாக்கள்..! - காவல் ஆணையர் தகவல்

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை ஆராய்ந்து ஏற்கனவே இருந்த 32 சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கு ரவுண்டானாக்கள் அமைத்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகரில் தேவைப்படும் இடங்களில் புதிதாக நவீன சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருவதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நவீன வகை போக்குவரத்து சிக்னலை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

சிக்னல் கம்பம் முழுவதும் டிஜிட்டல் மயத்தில் ரிமோட் கண்ட்ரோல் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கோவை மாநகரில் ஏற்கனவே 62 போக்குவரத்து சிக்னல்கள் இருந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு முழுவதும் ஆராய்ந்து 32 சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு அங்கு ரவுண்டானாக்கள் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வருகிறது.

தேவைப்படும் இடங்களில் புதிய நவீன சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சிக்னல்கள் அப்புறப்படுத்தப்பட்டு ரவுண்டானாக்கள் அமைத்துள்ள நிலையில், போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் குறைந்திருப்பதாகவும், அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் தொடர்பாக பொதுமக்களே நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.

இது போல பல்வேறு புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதிகளில் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அது போன்று அதிவேகமாக பேருந்துகள் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...