கோவை பாலக்காடு சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து - கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தால் பரபரப்பு

கோவை - கேரளா எல்லையான வாளையார் அருகே டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில், டேங்கர் லாரியில் இருந்த கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வாளையார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: வாளையார் அருகே லாரிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து, கோவையில் உள்ள சோடா தயாரிக்கும் நிறுவனத்திற்கு டேங்கர் லாரி மூலம் கார்பன்-டை ஆக்ஸைடு ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று, தமிழக - கேரளா எல்லையான வாளையார் வட்டப்பாரா அருகே வந்தபோது, கோவைக்கு காய்கறி லோடு ஏற்ற வந்த மற்றொரு லாரி, டேங்கர் லாரியின் பின்புறம் மோதியது.



இதில் டேங்கர் லாரியின் வால்வில் உடைப்பு ஏற்பட்டு, உள்ளே இருந்த கார்பன்-டை ஆக்ஸைடு பயங்கர சத்தத்துடன் வெளியேறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வாளையார் போலீசார் உடனடியாக பாலக்காடு - கோவை நெடுஞ்சாலையில் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தினர்.

பின்னர் அங்கு வந்த கஞ்சிக்கோடு தீயணைப்புத் துறையினர் கார்பன்-டை ஆக்ஸைடு வெளியேறுவதை தடுக்க தீவிரமாக போராடினர். சுமார் 2 மணி நேரம் போராடி டேங்கர் லாரியில் உடைப்பு ஏற்பட்ட வால்வை தீயணைப்புத் துறையினர் சரி செய்தனர்.

கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அதிக சத்தத்துடன் கார்பன்-டைஆக்ஸைடு வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வாளையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...