உடுமலை நகர மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கூட்டம்

உடுமலை நகராட்சி தலைவராக மத்தீன் உள்ளார். இவர் நகராட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், திமுக நகரச் செயலாளர் வேலுசாமி தலைமையில் திமுக கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை நகர மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள்கட்சி அலுவலகத்தில் கூட்டம்நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க-26, கூட்டணி கட்சி-3 மற்றும் அ.தி.மு.க-3 என மொத்தம் 32 கவுன்சிலர்கள் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது. தலைவர் தேர்தலின் போது, தி.மு.க தலைமை அறிவித்த ஜெயக்குமாருக்கு எதிராக, அப்போதைய நகரச்செயலாளர் மத்தீன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நகரசெயலாளர் பொறுப்பிலிருந்து திமுக தலைமை அவரை நீக்கியது.

இந்நிலையில் 87 தீர்மானங்களுடன் நகராட்சி கூட்டத்திற்கு தலைவர் மத்தீன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தலைவர் மீதான அதிருப்தி காரணமாக தி.மு.க நகரச்செயலாளர் வேலுசாமி தலைமையில், கட்சி அலுவலகத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில், 'தினசரி சந்தை குத்தகை 1.10 கோடி ரூபாயாகும். குத்தகை நீடித்து அதே நபருக்கு, பாதியாக குறைத்து, லட்சம் 55 ரூபாய்க்கு வழங்க தீர்மானம் உள்ளிட்ட நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த, பெரும் தொகை கைமாறியுள்ளது.

இதுதவிர நிர்வாகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடக்கிறது. எனவே, தலைவர், தீர்மானங்களுக்கு எதிராக தனியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கட்சித்தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளோம்,” என்றனர்.

உடுமலை திமுக நகர மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் தனியாக கூட்டம் நடத்தியதால் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...