கோவையில் உயர் ரக போதைப்பொருள் விற்பனை - கல்லூரி மாணவர் கைது!

கோவையில் உயர் ரக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட முகமது ஷானித் எனும் தனியார் கல்லூரி மாணவரை துடியலூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள 12 கிராம் எடைகொண்ட உயர்ரக (methamphetamine) போதைப்பொருளையும் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மைக்ரோபயாலஜி படித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர், துடியலூர் சுற்றுவட்டார பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த மாணவரை போலீசார் கண்காணித்து வந்தனர். பெங்கலூர் சென்றிருந்த மாணவர், துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு பகுதிக்கு வந்தபோது, போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் (methamphetamine) என்ற உயர் ரக போதை பொருள் இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அஷ்ரப் என்பவரது மகன் முகமது ஷானித் (வயது22) என்பதும், இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மைக்ரோபயோலஜி நான்காம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், முகமது ஷானித் பெங்களூருக்கு சென்று அங்கிருந்து (methamphetamine) என்ற உயர் ரக போதை பொருளை வாங்கி வந்து, கல்லூரி மாணவர்களை குறிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.22 ஆயிரம் மதிப்பிளான 12 கிராம் (methamphetamine) போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் யார்? பெங்களூரில் இருந்து மாணவர்களை தொடர்பு கொள்வது யார்? என்பது குறித்த விசாரணையை கோவை மாவட்ட போலீசார் தீவிரபடுத்தியுள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...