பல்லடம் அருகே சித்தம்பலம் பகுதியில் உள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் மழை வேண்டி நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை மற்றும் சங்க அபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்று மழை வேண்டி வழிபாட்டில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் நடைபெற்ற சிறப்பு விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் இன்று மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை மற்றும் சங்காபிஷேக விழா மற்றும் வருண மகா மந்திர வேள்வி நடைபெற்றது.

இத்திருத்தலத்தில் சிவபெருமானை மையமாக வைத்து 27 நட்சத்திரங்கள் 9 அதி தேவதைகள் ஒன்பது நவகிரகங்கள் 108 சிவலிங்கங்கள் அழகிய நவகிரக கணபதி உள்ளிட்ட தெய்வங்கள் அமைந்துள்ளது.

இன்று உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழவும்,மழை வேண்டியும் 108 சங்காபிஷேக விழா மற்றும் பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி நவகிரக நாயகருக்கு சிவ நாம பஜனைகள் பாடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இந்த சிறப்பு வழிபாட்டில் சிவபெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் இன்று மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை மற்றும் சங்காபிஷேக விழா மற்றும் வருண மகா மந்திர வேள்வி நடைபெற்றது.
இத்திருத்தலத்தில் சிவபெருமானை மையமாக வைத்து 27 நட்சத்திரங்கள் 9 அதி தேவதைகள் ஒன்பது நவகிரகங்கள் 108 சிவலிங்கங்கள் அழகிய நவகிரக கணபதி உள்ளிட்ட தெய்வங்கள் அமைந்துள்ளது.
இன்று உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழவும்,மழை வேண்டியும் 108 சங்காபிஷேக விழா மற்றும் பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி நவகிரக நாயகருக்கு சிவ நாம பஜனைகள் பாடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இந்த சிறப்பு வழிபாட்டில் சிவபெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.