கோவையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி உடல் கருகி உயிரிழப்பு - பீடி பற்ற வைத்த போது ஏற்பட்ட அசம்பாவிதம்

கோவை அடுத்த தொட்டிப்பாளையம் பிரிவு அருகேயுள்ள டேனியல் நகரை சேர்ந்த வெங்கடாசலம் (67) என்பவர் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் இருந்த நிலையில், பீடி பற்றவைத்த போது படுக்கையில் ஏற்பட்ட தீ விபத்தில், சிக்கி காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் தொட்டிப்பாளையம் பிரிவு அருகே பீடி பற்ற வைத்த போது படுக்கையில் தீ விபத்தில் நடக்க முடியாமல் இருந்த முதியவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை தொட்டிப்பாளையம் பிரிவு அருகே உள்ள டேனியல் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (67). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனால் அவர் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.

சம்பவத்தன்று வெங்கடாசலம் பீடி பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது நெருப்பு படுக்கையில் விழுந்து தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியுள்ளது.

அப்போது படுக்கையில் இருந்த வெங்கடாசலம் மீதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வெங்கடாசலத்தை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.



எனினும் சிகிச்சை பலனளிக்காமல் வெங்கடாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...