ஆன்லைன் முதலீடு எனக்கூறி கோவையை சேர்ந்த பெண் ஐடி ஊழியரிடம் ரூ.5.60 லட்சம் மோசடி!

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் எனக்கூறி, கோவையை சேர்ந்த பெண் ஐடி ஊழியரிடம் ரூ.5.60 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய வலியுறுத்தி கோவையை சேர்ந்த பெண் ஐடி ஊழியரிடம் 5.60 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டன் கணபதி அருகேயுள்ள வரதராஜலு நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி (26). ஐ.டி.ஊழியரான இவர், ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்துள்ளார். அப்போது இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மெசேஜ் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தான் பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுவதாக கூறியுள்ளார்.

தங்களது நிறுவனம் குறித்த யூடியூப் வீடியோவில் லைக் மற்றும் ஷேர் செய்தால் கமிஷன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் கூறியதாக தெரிகிறது.

இதனை நம்பிய புவனேஸ்வரி அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்குகளில் பல்வேறு கட்டங்களாக ரூ.5.60 லட்சம் பணத்தை அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பின்னர் புவனேஸ்வரிக்கு அந்த நபர் கூறியபடி கமிஷன் தொகை மற்றும் வருமானம் கிடைக்கவில்லை.

பின்னர் தான், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு என கூறி மர்மநபர் புவனேஸ்வரியிடம் ரூ.5.60 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன்லைன் மோசடி நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...