கோவை இடிகரையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் திருச்சாட்டு திருவிழாவில் சக்திக் கரகம் அழைத்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கோவை: இடிகரை அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில் திருவிழா களைக்கட்டியது.
கோவை இடிகரையில் அமைந்துள்ளது அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில். இக்கோவிலின் திருச்சாட்டுத் திருவிழா கடந்த 18ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதில் மணியகாரம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலிலிருந்து கம்பம் அழைத்தல், கம்பம் நடுதல், பூவோடு வைத்ததைத் தொடர்ந்து பக்தர்கள் பூவோடு எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று நடைபெற்ற அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சக்திக் கரகம் அழைத்தல், மாவிளக்கு, அலகு குத்தி தேர் இழுத்தல் நடைபெற்றது. இதில் இன்று காலை 4 மணியளவில் கரகம் எடுத்துக்கொண்டு இடிகரை ஊரை சுற்றி பக்தர்கள் வந்தனர்.
இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆடி கரகத்தை கோவிலுக்கு அழைத்து வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்