உடுமலையில் ஆன்லைன் பொருட்கள் விநியோக நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கொள்ளை!

உடுமலை அருகேயுள்ள எலையமுத்தூர் பிரிவில் உள்ள பாலாஜி என்பவரது ஆன்லைன் பொருட்கள் விநியோகம் செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.4.12 லட்சம் பணம் மற்றும் சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே ஆன்லைன் பொருட்கள் விநியோகம் செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குமரலிங்கம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் எலையமுத்தூர் பிரிவில் அரசு கலைக்கல்லூரி செல்லும் வழியில் ஆன்லைன் பொருட்களை வினியோகிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வேலையை முடித்துக் கொண்டு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவர் மீண்டும் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவுக்குள் இருந்த ரூ. 4 லட்சத்து 12 ஆயிரம் பணம் மற்றும் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து உடுமலை காவல்நிலையத்தி பாலாஜி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளை சேகரித்து மர்ம நபர்கள் குறித்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடைகள் அதிகம் இருக்கும் பகுதியில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் மற்றும் ஹார்ட் டிஸ்க் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...