கோவையில் தந்தையை அடித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் குடும்ப தகராறில்  தந்தையை அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.


கோவை: கோவையில் தந்தையை கொன்ற வாலிபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மகன் குமரவேல் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன் குமரவேலை கத்தியால் குத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கிருஷ்ணனுக்கு குமரவேல் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் குமரவேல் அவரது தந்தை கிருஷ்ணனை கட்டையால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து போலீசார் குமரவேலை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் குமரவேலுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சசிரேகா உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...