தமிழகத்தில் இன்று கொங்கு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு - வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் இன்றைய தினம் கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான நிலையில், ஈரோட்டில் சராசரியாக  37.5 டிகிரி செல்சியசும்,  கோவையில் சராசரியாக 36.3 டிகிரி செல்சியசும், நீலகிரியில் சராசரியாக 24.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவானதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலம் துவங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க துவங்கியது. இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவ்வப்போது, மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி, பொதுமக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இன்றைய தினம் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,ஈரோடு மாவட்டத்தில்,அதிகபட்சமாக 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும், குறைந்த பட்சமாக 23.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சராசரியாக 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், கோவை மாவட்டத்தில் அதிபட்சமாக 36.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும், குறைந்தபட்சமாக 25.4டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்சமாக 22.3 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 15.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 24.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகபட்சமாக 27.0 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 16.0 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 28.1 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...