தாராபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

தாராபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டுகள் பழமையான வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரின் மையப் பகுதியான சின்னக் கடை வீதியில் நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழாவானது கடந்த 22 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் பிரமாண்டமாக துவங்கியது. தொடர்ந்து விசேஷ பூஜைகள் அந்தரயாகம், வேதிகார்ச்சனை, மூல மந்திரம், ஹோமம், திரவி ஆகுதி, பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இதில், 64 வகையான மூலிகை திரவியங்கள் 12 புண்ணிய நதிகளின் மகா தீர்த்தங்கள், கலசங்களில் எடுத்து வரப்பட்டு மருதுரை பட்டீஸ்வர ஸ்வாமி ஆலய அர்ச்சகர் மந்த்ராச்சல சிவாச்சாரியார் தலைமையிலான 12 சிவாச்சாரியார்கள் அடங்கிய குழுவினர் யாகசாலை பூஜைகளை நடத்தினர்.

தொடர்ந்து இன்றைய தினம், ஜகத்குரு சிருங்கேரி சாரதா பீடம் பாரதி தீர்த்த சுவாமிகளின் நல்லாசியுடன் தமிழ்நாடு ஆரிய வைசிய மகா சபையின் கௌரவ தலைவர் ராஜா ராமலிங்கம், தலைவர் சுப்பிரமணி, பெடரேஷன் தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.



இதன்படி, காலை 9:00 மணிக்கு புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ராஜகோபுரம் மற்றும் அம்மன் சன்னதி கோபுரம் உள்ளித்தவைகளுக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனை பயபக்தியுடன் வணங்கி வந்தால் தடைபட்ட திருமண காரியங்கள், மனதுக்குப் பிடித்த வரன்கள், குடும்ப ஆரோக்கியம், கல்வி, தொழில், விவசாயம் உள்ளிட்டவைகளில் அபரிமிதமான முன்னேற்றம் ஆகியவை நிச்சயம் நடைபெறும் என்பது ஆண்டாண்டு கால நம்பிக்கையாக இருந்து வருகிறது.



சிறப்புமிக்க இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் அரசியல் ஆன்மீகம் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...