வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அனுப்பும் போராட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமகவினர், 1000 தபால்களை தபால் நிலையம் மூலம் முதலமைச்சருக்கு அனுப்பிவைத்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரி தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 1,000 கடிதங்களை அனுப்பினர்.

இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. மாவட்ட செயலளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தார். முன்னதாக 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் பேசுகையில், முதல் கட்டமாக ஆயிரம் கடிதங்கள் அனுப்பியுள்ளோம். மீண்டும் வரும் 31-ந் தேதிக்குள் 4 ஆயிரம் கடிதங்கள் அனுப்ப உள்ளோம், என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. மாவட்ட செயலளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தார். முன்னதாக 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் பேசுகையில், முதல் கட்டமாக ஆயிரம் கடிதங்கள் அனுப்பியுள்ளோம். மீண்டும் வரும் 31-ந் தேதிக்குள் 4 ஆயிரம் கடிதங்கள் அனுப்ப உள்ளோம், என்றார்.