உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள தாய்மார் பாலூட்டும் அறையை, செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர்: உடுமலை பேருந்து நிலையத்தில் மூடப்பட்டுள்ள பாலூட்டும் அறையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலமாக பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் பொதுமக்கள் உடுமலைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த சூழலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்டுவதற்கு ஏதுவாக பேருந்து நிலைய வளாகத்தில் தனியாக சிறிது காலம் செயல்பட்டு வந்த அந்த பாலூட்டும் அறை பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, கிராமத்திலிருந்து உடுமலை நகருக்கு வருகின்ற பெண்கள் பல்வேறு பணிகளை முடித்துக்கொண்டு திரும்பவும் வீட்டுக்கு செல்வதற்கு மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதில் கர்ப்பிணி மற்றும் கை குழந்தையுடன் உள்ள பெண்களும் அடங்குவர்.
பிரசவத்துக்கு பின்பு சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்டது. சிறிது காலம் செயல்பாட்டிலிருந்த அந்த அறை போதிய பராமரிப்பு இல்லாமல் நகராட்சி நிர்வாகத்தால் நீண்ட காலமாக பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது
இதனால் கைக்குழந்தை மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் உடுமலைக்கு வருகை தருகின்ற கிராமத்து பெண்கள் அவதிக்க உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த அறை கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடுமலை பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள பாலூட்டும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலமாக பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் பொதுமக்கள் உடுமலைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த சூழலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்டுவதற்கு ஏதுவாக பேருந்து நிலைய வளாகத்தில் தனியாக சிறிது காலம் செயல்பட்டு வந்த அந்த பாலூட்டும் அறை பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, கிராமத்திலிருந்து உடுமலை நகருக்கு வருகின்ற பெண்கள் பல்வேறு பணிகளை முடித்துக்கொண்டு திரும்பவும் வீட்டுக்கு செல்வதற்கு மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதில் கர்ப்பிணி மற்றும் கை குழந்தையுடன் உள்ள பெண்களும் அடங்குவர்.
பிரசவத்துக்கு பின்பு சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தைகளை கொண்டு வரும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் பாலூட்டும் அறை கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்டது. சிறிது காலம் செயல்பாட்டிலிருந்த அந்த அறை போதிய பராமரிப்பு இல்லாமல் நகராட்சி நிர்வாகத்தால் நீண்ட காலமாக பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது
இதனால் கைக்குழந்தை மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் உடுமலைக்கு வருகை தருகின்ற கிராமத்து பெண்கள் அவதிக்க உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த அறை கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடுமலை பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள பாலூட்டும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்தனர்.