12 மணி நேர வேலை சட்ட நகலை எரித்து திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்!

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்தை கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவின் நகலை எரித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்திற்கு எதிராக திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 21ஆம் தேதி அன்று, 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றும் சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது . இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் தமிழக அரசு உடனடியாக இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாநில செயலாளர் சிங்காரவேலன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழக அரசின் தொழிலாளர் சட்ட திருத்த மசோதா நகலை எரித்து தங்களை எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இதன் காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...