முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் - கோவை ஆட்சியரிடம் வழங்கிய யாசகர்!

தூத்துக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்ற முதியவர், தான் யாசகமாக பெற்ற 10 ஆயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் அளித்தார்.


கோவை: தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது75). மனைவி மறைந்த நிலையில், ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். 1980 முதல் மும்பையில் வேலை பார்த்து வந்த இவர், 2019ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் மஸ்கோத் அல்வா தயாரிப்பு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அன்று முதல் இவர், தான் யாசகமாக பெற்ற தொகையை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கவும் கல்வித்தொகை வழங்கவும் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.



இந்நிலையில், கொரோனா தொற்றுக்குப்பின், தான் யாசகமாக பெரும் தொகை, ரூ.10 ஆயிரமாக சேர்ந்தவுடன் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களிடமும் அவ்வப்போது முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சாமியார் போல தோற்றமளிக்கும் இவர், கோயில்களில் தங்குவதை காட்டிலும் காவல்துறை பாதுகாப்புடன் இருக்கக்கூடிய இடங்களான பேருந்து நிலையங்கள், முக்கிய சாலை சந்திப்புகள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.



இதுவரை 35க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொகைகளை வழங்கியுள்ள இவர், இன்று கோவை வந்து, தான் யாசகமாக பெற்று சேர்த்துவைத்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஆட்சியரிடம் வழங்கினார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...