மூளைச்சாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானம் - 8 பேருக்கு மறுவாழ்வு அளித்த உடுமலை மாணவர்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜய்குமார் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். இவரது உடல் உறுப்புகள், கோவை மற்றும் சென்னையை சேர்ந்த 8 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் அஜய் குமார் உடுமலைப்பேட்டையில் உள்ள வித்யசாகர் கல்லூரியில் எம்.காம் இறுதியாண்டு படித்து வந்தார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கல்லூரி சென்ற மாணவர் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அங்கு சிகிச்சை பலனில்லாமல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர், பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், மேல்சிகிச்சை பலனில்லாமல் அஜய்குமார் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதையடுத்து, அவருடைய உடலில் இருந்து எட்டு உறுப்புகள் சென்னைக்கு விமான மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஒரு கிட்னி மற்றும் நுரையீரலின் பகுதியை பி எஸ் ஜி மருத்துவமனை பயன்படுத்திக் கொள்வதாகவும், மீதமுள்ள உறுப்புகள் அனைத்தையும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளைச் சாவடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகளின் மூலம் எட்டு பேர் மறுவாழ்வு பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடுமலையில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...