துடியலூரில் செயின்பறிப்பு - இளைஞரை கைது செய்த தனிப்படை போலீஸ்

கோவை துடியலூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.


கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி (வயது43).

இவர் கடந்த மார்ச் 20ஆம் தேதி, தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், ராதாமணியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.



இச்சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் துடியலூர் தனிப்படை போலீசார் கோவையில் தலைமறைவாக இருந்த ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த முருகானந்தம் (வயது26) என்பவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபர் வேறு எங்காவது செயின் பறிப்பில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்ட போலீசார்,அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...