பல்லடம் அருகே ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு - மாணவர்கள் உற்சாகம்!

திருப்பூர் மாவட்டத்திலேயே முதல் முறையாக பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் "வெலாசிட்டி ஸ்கேட்டிங் காம்ப்ளக்ஸ்" என்ற சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானத்தை மங்கலம் மற்றும் பல்லடம் பகுதி காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று திறந்து வைத்தனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் இன்று திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் "வெலாசிட்டி ஸ்கேட்டிங் காம்ப்ளக்ஸ்" என்ற சர்வதேச தரத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் இன்று திறக்கப்பட்டது.



மங்கலம் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், பல்லடம் காவல் துணை ஆய்வாளர் ராஜன், திருப்பூர் மாவட்ட ஸ்கேட்டிங் சங்கத்தின் செயலாளர் தங்கதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



மேலும் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வரும் மாணவர்களின் ஸ்கேட்டிங் அணி வகுப்பினை துணை காவல் ஆய்வாளர் ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக திறக்கப்பட்ட ஸ்கேட்டிங் மைதானத்தில் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு சுற்றி வந்தனர்.



இது குறித்து வெலாசிட்டி ஸ்கேட்டிங் காம்ப்ளக்ஸ் இன் நிறுவனர் காமராஜ் பேசியதாவது, திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக பல்லடம் அருகே ஊஞ்ச பாளையத்தில் சர்வதேச தரத்தில் இந்த ஸ்கேட்டிங் மைதானம் திறக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்று திருப்பூர் மாவட்டம் முழுக்க மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானங்கள் திறக்கப்பட வேண்டும். மாநில அளவிலான போட்டிகளிலும், தேசிய அளவிலான போட்டிகளிலும் பல்லடம் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை புரிய இந்த மைதானம் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...